ஐபிஓ மூலம் ரூ.3,250 கோடி திரட்ட திட்டம்

நான்கு நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட விண்ணப்பம் அளித்துள்ளன. இந்த ஐபிஓ மூலம் ரூ.3,250 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளன.

தி லலித் என்கிற பெயரில் ஹோட்டல் சேவையில் உள்ள பாரத் ஹோட்டல்ஸ் நிறுவனம், மருத்துவ சேவையில் உள்ள சேலெட் ஹோட்டல்ஸ், ஆன் லைன் நிறுவனமான இந்தியா மார்ட் மற்றும் விவசாய கருவிகள் தயாரிப்பு நிறுவனமான மில்டெக் மெசினரி ஆகிய நான்கு நிறுவனங்களும் பொதுப் பங்கு வெளியிட விண்ணப்பித்துள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் மொத்தம் ரூ 3,250 கோடியை திரட்ட உள்ளன.

பாரத் ஹோட்டல்ஸ் ரூ 1,200 கோடியும், சேலெட் ஹோட்டல்ஸ் ரூ.950 கோடியும், இந்தியா மார்ட் நிறுவனம் ரூ. 600 கோடியும், மில்டெக் மெசினரி ரூ. 500 கோடியும் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இவை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையிலும் பட்டியலிடப்படும்.

Share:

No comments:

Post a Comment