ஜப்பான் அணி கேப்டன் ஓய்வு
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜப்பான் அணி தோல்வி கண்டதன் எதிரொலியாக தனது ஓய்வு முடிவை ஜப்பான் அணி கேப்டன் மகடோ ஹசீபே அறிவித்தார்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு ஜப்பான் முன்னேறியிருந்தது. இந்த நிலையில் அந்த அணி பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டு வெளியேறியது.
இதையடுத்து அணியின் கேப்டன் ஹசீபே தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஷ்ய உலகக் கோப்பையுடன் நான் தேசிய அணிக்காக விளையாடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். உலகக் கோப்பை போட்டியில் தோல்வி கண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. பெல்ஜியத்துடனான போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்.” என்றார்.
2010, 2014, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் ஜப்பான் அணிக்காக ஹசீபே விளையாடியுள்ளார். மேலும் அவர் கடந்த 12 வருடங்களாக ஜப்பான் அணிக்காக விளை யாடி வந்தார். 5 பயிற்சியாளர்களின் தலைமையில் அவர் அணிக்காக தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜப்பான் அணி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ளது.
No comments:
Post a Comment