ரூபாய் மதிப்பு சரிவால் கவலையடைய தேவையில்லை: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது. ஆனால் இதனால் கவலையடைய தேவையில்லை என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
சர்வதேச சூழல், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒரு டாலர் 57 ரூபாயில் இருந்து 68 ரூபாய் வரை மூன்று மாதங்களில் சரிவடைந்தது. அதனால் தற்போது ரூபாய் மதிப்பு சரிவை ஒப்பிடுவது சரியானது அல்ல. இதர முக்கியமான நாடுகளின் நாணய மதிப்பை விட ரூபாய் மதிப்பு உயர்வடைந்திருக்கிறது. அதனால் கவலைப்பட தேவையில்லை. ரூபாய் மதிப்பை குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை.
நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அதேபோல அடுத்த நிதி ஆண்டு வளர்ச்சி 8 % அளவில் இருக்கும். 2022-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.5 % என்னும் அளவில் இருக்கும். அதனை தொடர்ந்து இதே நிலையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல சீர்த்திருத்தங்களை அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் இவ்வளவு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்ததில்லை என்றும் ராஜீவ் குமார் கூறினார்.
No comments:
Post a Comment